-:-:-:-:-: 2017 - தசரா பெரும் திருவிழா நிகழ்ச்சி நிரல்கள் விபரம் :-:-:-:-:-
வணக்கம்!, தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் வட்டம், பரமன்குறிச்சி, வடக்கு நாடார் தெரு, (அரங்கன்விளை), ஸ்ரீ முத்துமாலை அம்மன் தசரா குழுவினர் வழங்கும், 2017 ஆம் வருட, வெற்றிகரமான எட்டாம் ஆண்டு தசரா பெரும் திருவிழா வரும் 27-09-2017 புதன்கிழமை முதல் 30-09-2017 சனிக் கிழமை வரை வெகுவிமரிசையாக நடைபெற இருப்பதால், அவ்வமயம் தாங்கள் அனைவரும் தங்கள் குடும்பத்தினருடன் வந்திருந்து தசராத் திருவிழாவினை சிறப்பித்துத்தந்து, குலசை ஸ்ரீ முத்தாரம்மனின் அருளைப் பெற்றுச் செல்லுமாறு உங்களை அன்புடன் அழைக்கின்றோம்
தசராக் குழுவில் இணைந்து வேடமணியும் பக்தர்கள், தங்களது பெயர்களை திரு. C. பாலமுருகன் மற்றும் K.பாஸ்கர் அவர்கள் வசம் பதிவு செய்து கொள்ளும்படி அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்
அனைவருக்கும் எங்களது இதயம்கனிந்த நவராத்திரி திருநாள் நல்வாழ்த்துக்கள்
இவண்
தலைவர்,
ஸ்ரீ முத்துமாலை அம்மன் தசராக்குழு,
வடக்கு நாடார் தெரு, (அரங்கன்விளை),
பரமன்குறிச்சி.
#########################################################################################
நிகழ்ச்சி நிரல்
21-09-2017 வியாழக்கிழமை :- கொடியேற்றம்
அருள்தரும் ஸ்ரீ ஞானமூர்த்தீஸ்வரர்
சமேத ஸ்ரீ முத்தாரம்மன் திருக்கோவில்.
குலசேகரபட்டிணம்.
27-09-2017 புதன்கிழமை 7 ஆம் :- தசராக்குழு காப்புகட்டுதல்.
திருநாள் காலை 10.00 மணி
இரவு 7.00 மணி :- தசராக்குழு அரங்கேற்றம்.
ஸ்ரீ முத்துமாலை அம்மன் திருக்கோவில்.
வடக்கு நாடார் தெரு, பரமன்குறிச்சி.
28,29,30-09-2017 வியாழன், வெள்ளி :- பக்தர்கள் பல்வேறு வேடமணிந்து
சனிக்கிழமை ,8,9,10 ஆம் திருநாள் காணிக்கை பெறுதல்.
30-09-2017 சனிக்கிழமை 10 ஆம் :- தசராக்குழு பக்தர்கள் அனைவரும்
திருநாள் இரவு 10.00 மணி குலசைசென்று ஸ்ரீ முத்தாரம்மனை
தரிசித்து, நேர்த்திக்கடனையும்,
காணிக்கையையும் செலுத்துதல்.
#########################################################################################